பாஜக மீது சோனியா கடும் பாய்ச்சல்-ஜேபிசி விசாரணை கோரிக்கையையும் நிராகரித்தார்

இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்து சோனியா தீவிர ஆலோசனை நடத்தினார்.
பின்னர் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
சோனியா காந்தி பேசுகையில், டெஹல்கா, கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குடும்பமே நில ஊழலில் ஈடுபட்டது ஆகியவற்றை பாஜக மறந்து விடக் கூடாது. எனவே ஊழல் குறித்து பேச அக்கட்சிக்கு தகுதியே கிடையாது.
ஊழல் குறித்து பாடம் எடுக்க அவர்கள் யார். முதலில் தனது கட்சியில் உள்ள பிரச்சினைகளை பாஜக சரி செய்யட்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது ஊழல் குறித்த புகார்கள் வந்தபோது உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது ஆதாரப்பூர்வமாக எதிர்க்கட்சிகள் புகார்களை சுமத்தியபோது அதுகுறித்து பாஜக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரை எதியூரப்பா பதவியில் நீடித்து வருகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜேபிசி விசாரணை நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவும், சிபிஐயும் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஜேபிசி விசாரணை அவசியமே இல்லாதது. மேலும் ஒரு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிமுன்பும் இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. ஆனால் இந்தக் கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தின் முத்தான நேரத்தை இப்படி எதிர்க்கட்சிகள் வீணடித்ததை நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள் என்றார் சோனியா காந்தி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications