2015-க்குள் இந்தியா - சீனா இடையே 100 பில்லியன் டாலர் வர்த்தகம்
டெல்லி: வரும் 2015-ம் ஆண்டுக்குள் இந்தியா - சீனா இடையே 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என இரு நாட்டுப் பிரதமர்களும் அறிவித்துள்ளனர்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென் ஜியோபோவும் டெல்லியில் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசினர். அப்போது பசுமைத் தொழில்நுட்ப ஒப்பந்தம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்களில் இந்தியாவும், சீனாவும் கையெழுத்திட்டன.
பசுமைத் தொழில்நுட்ப ஒப்பந்தம் தவிர, பொதுவான ஆறுகள் குறித்த தகவல் பரிமாற்றம், ஊடகப் பரிமாற்றம், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றில் தலா ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சீன வங்கி ஒழுங்குமுறை ஆணையம் இடையே ஒரு ஒப்பந்தமும், இந்திய எக்ஸிம் வங்கி (ஏற்றுமதி- இறக்குமதி வங்கி) மற்றும் சீன மேம்பாட்டு வங்கி இடையே ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகின.
பின்னர் இரு தலைவர்களும் விடுத்த கூட்டறிக்கையில், இந்தியா - சீனா இடையே வர்த்தகத்தில் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதைப் போக்கும் வகையில், 100 பில்லியன் டாலர் அளவுக்கு கூட்டு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 5 ஆண்டுகளில் இந்தியா அதிக அளவு பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும். மேலும் இருநாட்டு பிரதமர்களும் தடையின்றி பேசிக் கொள்ள வசதியாக ஹாட்லைன் வசதியும் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு நாட்டு தொழிலதிபர்களுக்கும் இடையிலான பிரச்சினைகளை பேசி முடிவுகள் மேற்கொள்ள இந்தோ - சீன தொழிலதிபர்கள் பேரவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications