முக்கிய விவகாரங்களில் மௌனம் காக்கும் ராகுலை நம்பி நாட்டை எப்படி ஒப்படைப்பது?-ஸ்ம்ரிதி இரானி கேள்வி
Subscribe to Oneindia Tamil
வதோதரா: நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் முக்கிய விவகாரங்கள் குறித்து வாய் திறக்காமல் இருக்கும் ராகுல் காந்தி எப்படி நாட்டை வழிநடத்தக்கூடும் என்று பாஜக மகளிர் அணித் தலைவியும் தொலைக்காட்சி நடிகையுமான ஸ்ம்ரிதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மௌனம் காத்து வரும் ராகுல் காந்தியை நம்பி எப்படி நாட்டின் அதிகாரத்தை ஒப்படைக்க முடியும்?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் நீரா ராடியா ஆகியோர் வீடுகளில் நடந்த ரெய்டு எல்லாம் வெறும் கண்துடைப்பு தான். இந்த ரெய்டுகளால் எந்த பலனும் இல்லை.
2ஜி விவகாரம் குறித்து ஜேபிசி விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக மகளிர் அணி நாடு முழுவதும் பேரணிகளும், கூட்டங்களும் நடத்தும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications