டியூசன் சென்ற 10-ம் வகுப்பு மாணவியை கற்பழிக்க முயன்ற 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் டியூசன் சென்ற 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி போதை மாத்திரை கொடுத்து கெடுக்க முயன்ற 2 பேர் சிக்கினர்.

நெல்லை தச்சநல்லூர் டவுன்ரோடு ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காவ்யா. டவுனி்ல் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அவர் முத்துமாரியம்மன் கோவி்ல் தெருவில் டியூசனுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு அறிமுகமான 2 வாலிபர்கள் காவ்யாவிடம் வந்து நைசாக பேசி அவரை முள்காட்டு பகுதிக்கு தூக்கிச் சென்றனர். காவ்யா கூச்சல் போடலே அவருக்கு போதை மாத்திரை கொடுத்து மயங்கச் செய்தனர். பின்னர் அம்மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர்.

காவ்யாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்று கொண்டிருந்த 2 பேர் அங்கு வந்தனர். வந்தவர்கள் மாணவியை காப்பாற்றாமல் அவர்களும் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதையடுத்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது சுதாரித்து கொண்ட கவ்யா அவர்களிடம் இருந்து தப்பி ஓடி விட்டார்.

தன் பெற்றோரிடம் விவரத்தைத் தெரிவித்தார். உடனே இது குறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பற்குணம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்து, ஐய்யனார் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நியூ காலனியைச் சேர்ந்த முரளி, மாயகிருஷ்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர். முரளி பாலிடெக்னிக்கிலும், மாயகிருஷ்ணன் டியூட்டோரியலும் படிக்கின்றனர். 10-ம் வகுப்பு மாணவியை 4 வாலிபர்கள் சேர்ந்து போதை மாத்திரை கொடுத்து பாலியல் பலாத்கரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+