பிஏசி விசாரணைக்குத் தயார் என்ற பிரதமரின் அறிவிப்பை நிராகரித்தது பாஜக
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு விசாரணைக்கு ஆஜராகத் தயார் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்பை பாஜக உடனடியாக நிராகரித்து விட்டது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ஊழல் நடந்தபோது அதைத் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்தவர் பிரதமர். அந்தக் குற்றச்சாட்டை அவர் மறுக்கவே முடியாது.
கடந்த காலங்களில் நடந்த மேலும் பல்வேறு ஊழல்களை எதிர்க்கட்சிகள் தோண்டியெடுக்க ஆரம்பித்திருப்பதால்தான் இப்படிப் பேசியுள்ளார் பிரதமர்.
ஜேபிசி விசாரணையை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இது ஒன்றும் சட்டவிரோதமான கோரிக்கை அல்ல. பொதுக் கணக்குக் குழுவுக்கு சில குறிப்பிட்ட அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. அதேசமயம், ஜேபிசிக்கு அதிக அளவிலான அதிகாரங்கள் உள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்லாமல் மும்பை ஆதர்ஷ் சொசைட்டி ஊழலையும் ஜேபிசி மூலம் விசாரிக்க வேண்டும் என்றார் ஜவடேகர்.












Click it and Unblock the Notifications