மல்லிகை, பிச்சி பூ விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை பூ மார்க்கெட்டில் மல்லிகை மற்றும் பிச்சிப் பூவின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ச்ங்கரன்கோவில், பாவூர்சத்திரம், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பூ விற்பனை மார்க்கெட்டுகள் உள்ளன. இங்கு அந்தந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக மல்லிகை, பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகின்றன. ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையின்போது மல்லிகை ரூ.400 வரையும், பிச்சி பூ ரூ.300 வரையும் விற்றது.

இந்நிலையில் பூக்களி்ன் விலை நேற்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. நெல்லை சந்தி்ப்பு பூ மார்கெட்டுக்கு நேற்று காலை முதல் பூக்களை வாங்கி செல்வதற்கு சில்லரை வியாபாரிகள் கூட்டம் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிமாக காணப்பட்டது. ஆனால் பூக்களின் வரத்து மிக குறைவாகவே இருந்தது.

இதனால் பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்தது. மல்லிகை ஒரு கிலோ ரூ.1200ம், பிச்சி ரூ.700க்கும் விற்பனையானது. கனகம்பாரம் ரூ.1000 ரூபாய்க்கு விற்பனையானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+