ரூ. 470 கோடி மோசடி-விசாரணைக்கு வருமாறு மோடிக்கு சென்னை போலீஸ் சம்மன்

கடந்த அக்டோபர் மாதம் சீனிவாசன் சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து மோடி ரூ. 470 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டதாக புகார் கூறியிருந்தார் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன். இதன் பேரில் மோடி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நம்பிக்கை மோசடி, கிரிமினல் சதித் திட்டம், மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா மேற்பார்வையில் துணை ஆணையர் ஸ்ரீதர் விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது விசாரணைக்காக நேரில் வருமாறு மோடி உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு வருமாறு அதில் கூறப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மோடி தவிர குணால் தாஸ் குப்தா, வேணு நாயர், ஆண்ட்ரூ ஜார்ஜியோ, சீமஸ் பிரையன், ஹரீஷ் கிருஷ்ணமாச்சார், அஜய் வர்மா ஆகியோருக்கும் சம்மன் போயுள்ளது.
அனைவரும் சிஆர்பிசி சட்டத்தின் 91வது பிரிவின் கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications