For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனவரி 2ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர்: முதல்வருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு

Google Oneindia Tamil News

Manmohan Singh
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் வரும் ஜனவரி 2ம் தேதி தமிழகம் வருகிறார்.

2ம் தேதி இரவு சென்னை வரும் அவர், ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். 3ம் தேதி சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் தமிழக அரசின் சார்பில் சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைக்கிறார். அங்கிருந்து விமான நிலையம் செல்லும் பிரதமர் டெல்லி திரும்புகிறார்.

பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்துக்கு அவர் சாலை வழியே செல்லாமல் ஹெலிகாப்டரில் செல்கிறார்.

அடையாறு பூங்கா திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அமைச்சர் ராசா ராஜினாமா செய்த பின்னர் முதல்வர் கருணாநிதியை பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X