தேர்தலில் தனித்து நிற்பது பாமகவுக்கு புதிதல்ல: டாக்டர் ராமதாஸ்
திருவள்ளூர்: தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்பது பாமகவுக்கு ஒன்றும் புதிதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,
தமிழக மக்கள் தொகையில் இரண்டரை கோடி பேர் வன்னியர்கள். அவர்கள் அனைவரும் ஒரு அணியாகத் திரண்டு வன்னியர் குலத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க அரும்பாடுபட வேண்டும்.
வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தற்போது தெரிவிக்க விரும்பவில்லை. கூட்டணியே இல்லாமல் தனித்து நிற்பதும் நம் கட்சிக்கு ஒன்றும் புதிதன்று.
ஏற்கனவே, கடநத 81, 91, 96 தேர்தல்களில் தனித்து நின்றோம். முதல் முறை 1 எம்.எல்.ஏவும், 2வது முறை 4 எம்எல்ஏவும் பெற்ற நாம் தற்போது 100 எம்எல்ஏக்களை பெற வேண்டும். இதற்கு இளைஞர்கள் வரும் ஜனவரி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.
தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களி்ல் வன்னியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றபோதிலும் பாமக வலுவான நிலையில் உள்ளது. பிற மாவட்டங்களில் இருக்கும் வன்னியர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் நம் பக்கம் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications