Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை மாவட்ட உள்ளாட்சி இடைதேர்தல்: வேட்பு மனு தாக்கல் முடிந்தது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகம் முழுவதும் ஜனவரி 10ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடைத்தேர்தல் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி நடக்கிறது.

இதில், நெல்லை மாவட்டத்தில் தென்காசி யூனியன் 6வது வார்டு கவுன்சிலர், மறுகால்குறிச்சி, சிங்கனேரி, இடையன்குளம், அலங்காரபேரி, புலியங்குளம் ஆகிய 5 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பணகுடி பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் மற்றும் 13 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளிட்ட 20 காலியிடங்கள் உள்ளன.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் வரை 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று தென்காசி யூனியன் 6வது வார்டுக்கு ஒருவரும், இடையன்குளம், அலங்காரபேரி கிராம பஞ்சாயத்து தலைவருக்கு தலா இருவரும், பணகுடி பேரூராட்சி வார்டுக்கு ஒருவருமாக 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.

நாளை காலை 11 மணிக்கு வேட்பு மனுக்கள் பரீசிலனை செய்யப்படும். வரும் 3-ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். வரும் 10-ம் தேதி காலை 7 மணி முதல் 5 மணி வரை தேர்தல் நடக்கிறது. 12-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+