ரூ. 400 கோடி மோசடி செய்த சிட்டி வங்கி ஊழியர் சிவராஜ் பூரி கைது

Subscribe to Oneindia Tamil

Citibank
கர்கான்: மோசடியான கணக்குகள் மூலம் ரூ. 400 கோடி பணத்தை சுருட்டி இந்திய வங்கித்துறையின் மிகப் பெரிய ஊழலை புரிந்துள்ள அதன் ஊழியர் சிவராஜ் பூரியை போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹரியானா மாநிலம் கர்கானில் உள்ள சிட்டி வங்கிக்கிளையில் பணியாற்றி வந்தவர் இந்த பூரி. இவர் 20 பெரும் பணக்காரர்களை அணுகி அவர்களிடம் போலியான பல்வேறு திட்டங்களைத் தெரிவித்து அவர்களது கணக்குகளில் பெரும் பணத்தை முதலீடு செய்ய வைத்து அவற்றை மோசடியான முறையில் தனது கணக்குகளுக்கு மாற்றி விட்டார்.

இவ்வாறாக கிட்டத்தட்ட ரூ. 400 கோடி வரை அவர் சுருட்டியுள்ளார். இந்திய வங்கிகள் வரலாற்றில் ஒரு தனி நபர் இவ்வளவு பெரிய மோசடியைச் செய்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தற்போது பூரியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இன்று அவர் கைது செய்யப்பட்டதாகவும், விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்கான் போலீஸ் கமிஷனர் தேஸ்வால் கூறுகையில், மோசடியின் அளவு ரூ. 300 கோடியாகஇருக்கும் என சந்தேகிக்கிறோம். தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில்தான் மோசடி நடந்தது எப்படி என்பது தெரிய வரும்.

இந்த வழக்கை விசாரிக்க 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூரியுடன் மேலும் 3 பேருக்குத்த தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது என்றார்.

இந்த மோசடியில் பூரியின் தந்தை ரகுராஜ் பூரிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நார்வே மார்ட்டின் என்ற நிதித் தரகு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+