என்டிடிவி துணையுடன் செய்திச் சேனல் ஆரம்பிக்கும் மாத்ருபூமி!
திருவனந்தபுரம்: கேரளாவின் முக்கிய நாளிதழான மாத்ருபூமி விரைவில் புதிய செய்தி சேனல் தொடங்குகிறது. மாத்ருபூமி நியூஸ் என்ற பெயரில் ஆரம்பமாகும் இந்த சேனலுக்கு கன்சல்டன்டாக பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளது என்டிடிவி நிறுவனம்.
இதுகுறித்து மாத்ருபூமியின் எலெக்ட்ரானிக் மீடியா மார்க்கெட்டிங் இயக்குநர் ஷ்ரேயம்ஸ் குமார் கூறுகையில், "மாத்ருபூமி நியூஸ் சேனல் உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளோம். விரைவில் கிடைத்துவிடும் என்று நம்புகிறோம். செய்திப் பிரிவுக்கான ஆளெடுப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்த சேனல் இயங்கும்", என்றார்.
மலையாளத்தில் செய்திச் சேனல்களுக்குப் பஞ்சமில்லை. ஏற்கெனவே ஏசியாநெட் நியூஸ், கைரளி (பீப்பிள்), இந்தியா விஷன், மலையாள மனோரமா போன்றவை 24 மணி நேர செய்திகளை வழங்கி வருகின்றன.
விரைவில் சன் குழுமத்தின் சூர்யா நியூஸ் வரவிருக்கிறது.
ஆனால் விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால், மாத்ருபூமி சேனலுக்கு வரவேற்பு இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் ஷ்ரேயம்ஸ் குமார்.












Click it and Unblock the Notifications