காவல் நிலையங்கள் 3 ஆக தரம் பிரிப்பு: 2013ல் பணிகள் முடியும்
நாகர்கோவில்: காவல் நிலையங்களை சிறிய, நடுத்தரம் மற்றும் உயர்நிலை என்று மூன்றாக தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது என்று தென்மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தென்மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
குமரி மாவட்டத்தில் தனியாக பட்டாலியன் உருவாக்குதல், சப் டிவிஷன்கள் உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை. காவல் நிலையங்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றவர்களால் காவல் நிலைய பணிகளில் பாதிப்பு இல்லை.
சிறப்பு எஸ்ஐக்களும் ரோந்து, பீட் பணிகளை கவனிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. சிறிய காவல் நிலையங்கள் 30 காவலர்களை கொண்டதாக செயல்படும்.
நடுத்தர காவல் நிலையங்களில் 50 பேரும், உயர்நிலை காவல் நிலையங்களில் 80 காவலர்களும் இருப்பர். இதற்காக எஸ்பிக்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு காவல் நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களை தரம் பிரிக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள சில காவல் நிலையங்களில் குறைந்தபட்சமாக 16 காவலர்கள் உள்ளனர். அது 30 பேராக நிர்ணயம் செய்யப்படு்ம். இந்த தரம் பிரிப்பு நடவடிக்கைகள் 2013-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
தற்போது நெல்லை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக தென்மண்டல அளவில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். புதிய காவலர்களாக தேர்வு செய்யப்பட்டு வருபவர்கள் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். கன்னியாகுமரியில் சுற்றுலா போலீஸ் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications