காவல் நிலையங்கள் 3 ஆக தரம் பிரிப்பு: 2013ல் பணிகள் முடியும்
நாகர்கோவில்: காவல் நிலையங்களை சிறிய, நடுத்தரம் மற்றும் உயர்நிலை என்று மூன்றாக தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது என்று தென்மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தென்மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
குமரி மாவட்டத்தில் தனியாக பட்டாலியன் உருவாக்குதல், சப் டிவிஷன்கள் உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை. காவல் நிலையங்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றவர்களால் காவல் நிலைய பணிகளில் பாதிப்பு இல்லை.
சிறப்பு எஸ்ஐக்களும் ரோந்து, பீட் பணிகளை கவனிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. சிறிய காவல் நிலையங்கள் 30 காவலர்களை கொண்டதாக செயல்படும்.
நடுத்தர காவல் நிலையங்களில் 50 பேரும், உயர்நிலை காவல் நிலையங்களில் 80 காவலர்களும் இருப்பர். இதற்காக எஸ்பிக்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு காவல் நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களை தரம் பிரிக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள சில காவல் நிலையங்களில் குறைந்தபட்சமாக 16 காவலர்கள் உள்ளனர். அது 30 பேராக நிர்ணயம் செய்யப்படு்ம். இந்த தரம் பிரிப்பு நடவடிக்கைகள் 2013-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
தற்போது நெல்லை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக தென்மண்டல அளவில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். புதிய காவலர்களாக தேர்வு செய்யப்பட்டு வருபவர்கள் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். கன்னியாகுமரியில் சுற்றுலா போலீஸ் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications