Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீசல் இல்லை.. பஸ்கள் ஓடவில்லை: ஜெயலலிதா புகார்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துக்கு தமிழக அரசு பணம் கட்டத் தவறிவிட்டதால் டீசல் வழங்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் முடங்கிப் போயுள்ளன என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளுக்கான டீசல் மற்றும் ஆயில், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள பங்க்குகளில் நிரப்பப்படுகிறது.

இவற்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐஓசி) வினியோகிக்கிறது. டீசலுக்கான பணத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கி காசோலை மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஐஓசிக்குச் செலுத்தும். இதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையாகும்.

இந் நிலையில், கடந்த சில மாதங்களாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஐஓசிக்கு முறையாக பணம் சென்று சேராததன் காரணமாக, பணம் கொடுத்தால் மட்டுமே டீசல் வழங்கப்படும் என்று ஐஓசி தெரிவித்து விட்டது.

ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், டீசலுக்கான பணத்தைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன.

லாபத்தில் இயங்குவதாகக் கூறப்படும் மாநகர போக்குவரத்துக் கழகம் கூட ரூ.18 கோடி அளவுக்கு டீசல் பாக்கி வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பஸ்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் டயர்கள், உதிரி பாகங்கள் இல்லாததன் காரணமாகவும் நூற்றுக்கணக்கான பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் நிர்வாகச் சீர்கேடும், ஊழலும்தான்.

மேலும், பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாதச் சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதாகவும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்கள் ஓர் ஆண்டாக நிலுவையில் இருக்கின்றன என்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். (ஜெவுக்கு ஒரு கேள்வி: நிலைமை இப்படி இருந்தால் சமீபத்திய அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தேர்தலில் திமுக தொழிற்சங்கத்தை தொழிலாளர்கள் ஏன் வெல்லச் செய்தனர்?!)

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இது போன்ற நிலை நீடித்தால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாவதுடன், விமானக் கட்டணம் அளவுக்கு கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பஸ்களில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.

பஸ்களுக்கான டீசலைக் கூட வாங்க முடியாத அளவுக்கு, தொழிலாளர்களின் ஓய்வூதியப் பயன்களை நிறுத்தி வைக்கக்கூடிய அளவுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முடங்கச் செய்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முடங்க வைத்த திமுக ஆட்சி முடங்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு கூறியுள்ளார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+