சென்னையில் ஓடும் பேருந்தில் கண்டக்டர் மரணம்: பயணிகள் அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ஓடும் பேருந்தில் நடத்துனர் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சென்னை மாநகரப்பேருந்தில் நடத்துனராக இருந்தவர் பாஸ்கரன். அவர் சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து கே. கே. நகர் சென்ற பேருந்தில் பணியில் இருந்தார்.
இன்று அந்த பேருந்து கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மயக்கமாக இருப்பதாக தெரிவித்து இருக்கையில் அமர்ந்த அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவி்த்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறி்த்து கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications