வாஷிங் மெஷினில் போட்டு குழந்தையை கொன்ற தாய் தற்கொலை
திருவனந்தபுரம்: கேரளாவில் பெற்ற குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக் கொலை செய்த தாய் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் ஆழப்புழா அருகே உள்ள குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான். அவருடைய மனைவி சுமா. சில வாரங்களுக்கு முன் சுமா தனது 8 மாத குழந்தையை வீட்டில் இருந்த வாஷிங் மெஷினில் போட்டு கொலை செய்தார். இது தொடர்பாக ஆலப்புழா போலீசார் வழக்கு பதிவு செய்து சுமாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஆலப்புழா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் சுமாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. விடுதலையான அவரை கணவர் ஜான் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். குழந்தையை கொலை செய்ததால் சுமா மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற சு்மா வீடு திரும்பவில்லை. கணவர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவர் ஜான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சுமாவை தேடி வந்தனர். அப்போது குட்டநாடு பகுதியில் பூங்கரை ஆற்றின் கரையில் சுமாவின் மணிபர்ஸ் கிடந்தது.
அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுமாவின் மணிபர்சில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் எனக்கு மனநிலை சரியில்லை என்று எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications