ஜேபிசி விசாரணை மூலம் அதிகாரத் தரகர்களை அம்பலப்படுத்த முடியும்-பாஜக
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்துள்ள முறைகேடுகளை மட்டுமல்லாமல், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள அதிகாரத் தரகர்களின் பங்குகளையும் கூட ஜேபிசி விசாரணையின் மூலம் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த முடியும் என்று பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து அருண் ஜேட்லி கூறுகையில், ஜேபிசி விசாரணை மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழலின் பின்னணி, அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதை அறிய முடியும். அதேசமயம், நீரா ராடியா போன்ற அதிகாரத் தரகர்களுக்கு உள்ள தொடர்புகளையும் நாம் அறிய முடியும்.
மேலும் தொலைத் தொடர்புத்துறையை இவருக்குத்தான் தர வேண்டும் என்று பிரதமரையும், காங்கிரஸ் மேலிடத்தையும் வலியுறுத்திய, நெருக்கிய அதிகாரத் தரகர்கள் யார் என்பதும் கூட அம்பலத்திற்கு வரும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடாளுமன்றம் இயங்க முடியாமல் போனது வருத்தமான விஷயம்தான். ஆனால் இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு அங்கமும் ஊழல் புற்றால் அரிக்கப்பட்டிருக்கிருப்பதை மக்கள் உணர இது வாய்ப்பாக அமைந்தது என்று கூறினார் ஜேட்லி.












Click it and Unblock the Notifications