முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூனியர் விகடனுக்கு சம்மன்
சென்னை: ஜூனியர் விகடன் இதழ் மீது முதல்வர் கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூனியர் விகடன் ஆசிரியருக்கு சம்மன் அனுப்ப சென்னை
கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த இதழில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையத்திற்கு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்ட கட்டுரை தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக தமிழக முதல்வர் கருணாநிதி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
ஜூனியர் விகடன் வெளீயிட்டாளர் சீனிவாசன், ஆசிரியர் கே. அசோகன் , செய்தியாளர் சரவணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், ஆசிரியர், வெளியீட்டாளர், செய்தியாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் பிப்ரவரி 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications