Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணல் அள்ள தடை-கருணாநிதியை சந்தித்து மனு கொடுக்கும் லாரி உரிமையாளர்கள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: இயந்திரம் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்கக் மணல் லாரி உரிமையாளர்கள் இன்று தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளனர்.

ஆறுகள் மற்றும் அரசு மணல் குவாரிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆட்கள் மூலம் மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கூலிக்கு ஆட்கள் கிடைக்காததால் மணல் அள்ள காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே இயந்திரம் மூலம் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி கடந்த 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக மணல் லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.

இதற்கிடையே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். முன்னதாக அவர்கள் அந்தந்த ஊர்களில் லாரிகளை வரிசையாக நிறுத்தி போராட்டத்தை வெளிப்படுத்தினர். பாளை டக்கரம்மாள்புரம் அருகே நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+