எல்கேஜி படிப்பில் சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை-அரசு
சென்னை: எல்கேஜி படிப்பில் சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நர்சரிப் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐஏஎஸ் கூட எளிதாக படித்து விட முடியும். ஆனால் எல்கேஜியில் அட்மிஷன் வாங்குவது மிகப் பெரிய மலையைப் பிளக்கும் காரியமாகியுள்ளது. விடிய விடிய பள்ளிகளின் முன்பு வரிசையில் காத்திருந்து, விண்ணப்ப பாரம் வாங்கி, அதைக் கொடுத்து, பள்ளிகள் நடத்தும் நேர்முகத்தேர்வில் அப்பா, அம்மாக்கள் கலந்து கொண்டு சரியாக பதிலளித்து, பிள்ளைகள் நுழைவுத் தேர்வு எழுதி பாஸ் செய்தால்தான் அட்மிஷன் கொடுக்கின்றன பல பள்ளிகள்.
இதில் பல பள்ளிகள், அப்பா, அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் அல்லது பட்டப் படிப்பு படித்திருக்காவிட்டால் அட்மிஷனே தருவதில்லை.
இந்தக் காலக் கொடுமைக்கு முடிவு கட்டும் வகையில், 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வியை சட்டம் மூலம் கொண்டு வந்துள்ளது அரசு. மத்திய அரசின் இந்தத் திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் முறையாக அமல்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 8ம் வகுப்பு வரை யாரையும் பெயிலாக்கக் கூடாது என்றும் சட்டம் கூறுகிறது.
இருப்பினும் எல்.கே.ஜிக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் கொடுமை இன்னும் பல நர்சரிப் பள்ளிகளில் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் இதை நடத்தக் கூடாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,
ஜுலை 1-ந்தேதி 3 வயது நிரம்பிய குழந்தைகள் எல்.கே.ஜி.யில் சேர தகுதி உடையவர்கள். அவர்களை எல்.கே.ஜி.யில் சேர்க்க எந்த நுழைவுத்தேர்வும் நடத்தக்கூடாது. அவர்களின் பெற்றோர் படித்திருக்கிறார்களா என்று கேட்கக்கூடாது. விண்ணப்ப கட்டணம் ரூ.50க்கு மேல் இருக்கக்கூடாது.
மாணவர் சேர்க்கைக்காக நன்கொடை வசூலிக்கக்கூடாது. பள்ளிக்கூடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு புகையிலைபொருட்கள் விற்கக்கூடாது. புகை பிடிக்கவும் கூடாது. பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
மாணவர்கள் நுழைவுத்தேர்வு நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் வேலை ஏவக்கூடாது. அடிக்கக்கூடாது. நான் இங்கு கூறியவற்றை ஏற்கனவே பல முறை பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications