பொங்கலையொட்டி 5 கேரள மாவட்டங்களில் அரசு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழகத்தில் ஓணம் பண்டிகையின்போது சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதைப் போல, பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஐந்து மாவட்டங்களில் உள்ளூ்ர் விடுமுறை விடுவதற்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன் உத்தரவிட்டுள்ளார்.

மலையாளிகள் விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, தமிழகத்தில் உள்ள மலையாளிகளும் உற்சாகமாக கொண்டாடுவார்கள். இதையடுத்து தமிழகத்தில் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஓணம் பண்டிகையின்போது உள்ளூர் விடுமுறை அளிக்கபப்ட்டு வருகிறது.

இதைச் சுட்டிக்காட்டி கேரளாவிலும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் ஐந்து மாவட்டங்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேரள அரசை பல்வேறு தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. சமீபத்தில் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியும் கடிதம் மூலம் கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது அந்தக் கோரிக்கையை அச்சுதானந்தன் ஏற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு, திருவனந்தபுரம், பாலக்காடு, இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் விடுமுறை அளிக்க அச்சுதானந்தன் அனுமதி அளித்தார்.

இதன்படி, வரும் ஜனவரி 15 ஆம் தேதி இந்த மாவட்டங்களில் பொங்கல் விடுமுறை என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+