குப்பைத் தொட்டியில் கலைஞர் காப்பீட்டு அட்டைகள்!
Subscribe to Oneindia Tamil
பல்லடம்: போலீஸ் நிலையம் எதிரேநாரணாபுரம் கிராம அதிகாரி அலுவலகம் உள்ளது. இதன் அருகே குப்பை மேட்டில் கலைஞர் காப்பீட்டு அட்டைகள் குவிந்து கிடந்தன. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கிராம அதிகாரி அலுவலகத்தில் புகார் செய்தனர்.
கிராம அதிகாரி மதியழகன் அங்கு சென்று பார்த் தார். குப்பைமேட்டில் கிடந்த காப்பீடு அட்டைகளை கைப்பற்றினர்.
இதுபற்றி அவர் கூறுகையில், "விநியோகிக்கப்படாத கலைஞர் காப்பீட்டு அட்டைகள் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் உள்ளன. அட்டை கிடைக்காதவர்கள் வந்து அவர்களே தங்களது அட்டையை தேடி எடுத்துச் செல்கின்றனர்.
அப்படி தேடியவர்களில் தனக்கு அட்டை வராத கோபத்தில் அட்டைகளை அள்ளி குப்பை தொட்டியில் போட்டி இருக்கலாம். இது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்...", என்றார்.












Click it and Unblock the Notifications