செஞ்சி அருகே பிச்சைக்காரரை கொலை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை
செஞ்சி: செஞ்சி அருகே பிச்சைக்காரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ் (61).
இவர் கடந்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் 60 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அருள்தாஸ் மனைவியிடம் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து சந்தேகமடைந்த அருள்தாஸ், அவரை தடியால் தாக்கினார். இதில் பிச்சைக்காரர் பலத்த காயம் அடைந்து இறந்து போனார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அருள்தாஸுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications