பிப். 27ல் மதுரையில் மாநாடு: ஜான் பாண்டியன் அறிவிப்பு
மதுரை: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பிப்ரவரி மாதம் 27- ம் தேதி அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மக்களுக்காக துவங்கப்பட்ட கட்சி தான் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம். இந்த கட்சி நான் சிறைக்கு சென்றதும் அழிந்து விடும் என சிலர் கணக்கு போட்டனர்.
ஆனால் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் புத்துயிர் பெற்றுள்ளது.
என் மீது இதுவரை 47 வழக்குகள் போடப்பட்டது. அனைத்திலும் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். சட்டத்தின் பார்வையில் நான் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.
எங்களது கட்சியின் பலத்தை காட்டும் வகையில் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாட்டை நடத்த உள்ளோம்.
எங்கள் சமுதாயத்தை ஆதரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம். கூட்டணி குறித்து தொண்டர்கள் மற்றும் மக்களின் கருத்தைக் கேட்டு தான் முடிவு செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications