தடையை மீறி சேவல் சண்டை-கண்டுக்காத போலீசார்
கரூர்: கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் அரவாக்குறிச்சி, சின்னதாராபுரம், பூலாம்வலசு, கோவிலூர் உள்ளி்ட்ட பல பகுதிகளில் சேவல் சண்டை நடைபெறும்.
இதில் சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி சண்டையிடவிடுவதால் ரத்தக்காயம் ஏற்படுவதோடு இதனால் போட்டியை நடத்துபவர்களுக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து இது போன்று சேவல் கால்களில் கத்தியை கட்டி சண்டையிட தமிழக அரசும், நீதிமன்றமும் தடை விதித்து இருந்தது.
இந்த நிலையில் கோவிலூரில் நடைபெற்ற சேவல் சண்டையிலும், பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற சேவல் சண்டைகளிலும் போலீசார் முன்னிலையிலேயே சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி சண்டை நடத்தப்பட்டது.
இதை செய்தியாக வெளியிடாமல் இருக்க உரியவர்களுக்கு லஞ்சமும் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மிருக வதைக்கு எதிரான பெரும் குற்றம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications