ஆக்டாராய், மண்டி வரியை ஒழிக்க மாநில அரசுகளுக்கு பிரணாப் கோரிக்கை

டெல்லியில் இன்று மாநிலநிதியமைச்சர்கள் மாநாடு நடந்தது. விலைவாசி உயர்வைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடந்தது. இதில் தலைமை வகித்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், உள்ளூர் வரிகளான ஆக்ட்ராய், மண்டி வரி உள்ளிட்டவற்றை மாநிலஅரசுகள் கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால் விலைவாசி உயர்வு வெகுவாக குறையும்.
மேலும் விவசாய உற்பத்தியாளர்களுக்கும், சில்லறை விற்பனையாளர்களுக்கும் இடையிலான இடைவெளியையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஆக்ட்ராய் உள்ளிட்ட வரி விதிப்புகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்களை பாதிக்கிறது என்றார்.
ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியின் பேச்சை மறுத்துப் பேசினர். விலைவாசி உயர்வுக்கும், பண வீக்கத்திற்கும் மாநில அரசுகளை விட மத்திய அரசே முக்கியக் காரணம். அதன் பங்குதான் அதிகம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
மத்திய அரசின் கொள்கைள் சரியில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், கச்சா எண்ணை, பெட்ரோல், டீசல் மீதான வரிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என பிரணாபுக்கு கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications