புதுவை காங். உடைகிறது-எம்.எல்.ஏ. பதவியை உதறினார் ரங்கசாமி

இன்று காலை சட்டசபைக்கு வந்த ரங்கசாமி அங்கு சட்டசபை செயலாளரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ரங்கசாமியின் ஆதரவாளர்களும் தங்களது அமைச்சர், எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் முதல்வர் வைத்திலிங்கம் ஆட்சி கவிழும் அபாயமும் அதிகரித்துள்ளது. மேலும் கட்சியும் உடைகிறது.
புதுவை சட்டசபைக்கும், தமிழக சட்டசபையுடன் சேர்த்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்போது ரங்கசாமி ரூபத்தில் எழுந்துள்ள புதிய சிக்கலால் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முதல்வர் பதவியிலிருந்து அகற்றப்பட்டது முதல் ரங்கசாமி அதிருப்தியுடன் இருந்து வந்தார். அவரும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் புது கட்சி தொடங்க வேண்டும் என ரங்கசாமியை அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்தே அவர் ராஜினாமா செய்துவிட்டு புதிய கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்துள்ளார்.
ரங்கசாமியை சமாதானப்படுத்த கட்சி மேலிடம் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வந்தது. ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை தோல்வியில் முடிவடைந்தன.












Click it and Unblock the Notifications