எடியூரப்பா மீது வழக்கு... ஆளுநர் செய்தது சரியே! - ப சிதம்பரம்

கவர்னர் பரத்வாஜை திரும்பப் பெறக் கோரி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இது குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், "ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகும் முதலவர் அல்லது அமைச்சர் மீது வழக்கு தொடர அனுமதி கொடுக்கும் அதிகாரம் மற்றும் உரிமை ஒரு மாநில ஆளுநருக்கு உள்ளது.
அதன்படி எடியூரப்பா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அனுமதி கொடுத்தது சரியானதுதான். இதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில் இது சட்டப்பிரிவுகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியினர் இந்த விவகாரத்தை தேவையில்லாமல் சத்தம் போட்டு தெருவுக்கு கொண்டு வந்து விட்டனர். இதுதான் தவறானது.
இந்த விஷயத்தில் பா.ஜ.க.வினர் நடந்து கொள்ளும் விதம் முழுமையாக ஏற்க இயலாதது. வழக்கைச் சந்தித்து தன்னை குற்றமற்றவராகக் காட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாக ஏன் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது," என்றார்.












Click it and Unblock the Notifications