சிவகாசி பட்டாசு ஆலை விபத்து-உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே முதலிப்பட்டி பெரியஆவுடையார் கிராமத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதலிப்பட்டி பெரிய ஆவுடையார் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பட்டாசு தொழிற்சாலை குடோனில் தீவிபத்து ஏற்பட்டு வெடிவிபத்தாக மாறியது. இதில் 8 பேர் பலியானர்கள்.
இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் இழப்பீட்டு நிதியாக அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ. 10,000 வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications