கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த டெல்லி கிளம்பினார் எதியூரப்பா
பெங்களூர்: ஊழல் வழக்குகள், ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எதியூரப்பா இதுகுறித்து கட்சித் தலைமையுடன் விவாதிக்க இன்று டெல்லி கிளம்பிச் சென்றார்.
எதியூரப்பா மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்து விட்டார். இதையடுத்து அவர் மீது 2 ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதை சட்டரீதியா எதிர்த்துப் போராடப் போவதாக எதியூரப்பா கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கட்சித தலைமையுடன் ஆலோசிக்க எதியூரப்பா இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி கிளம்பும் முன் பெங்களூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, கட்சியின் தேசியத் தலைவர்களை சந்திப்பேன். அரசியல் நிலவரம் மற்றும் நமது ஆளுநரின் போக்கு குறித்து விவாதிப்பேன் என்றார்.
நாளை கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்கள் குழும், பாஜக தலைவர்களும் ணைந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து ஆளுநர் மீது குறை கூறி மனு அளிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications