போலீஸ் ஸ்டேஷனில் வைத்து மகளுக்குக் கத்திக் குத்து-தந்தை கைது
சென்னை: சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென தனது மகளைக் குத்தி விட்டார் ஒரு
தந்தை. இதையடுத்து அந்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் கலைவாணி. இவர் தனது தந்தையின் பேச்சை மீறி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார் ஏழுமலை. இதையடுத்து இரு தரப்பையும் செங்குன்றம் போலீஸார் காவல்நிலையத்திற்கு வரவழைத்து பஞ்சாயத்து பேசினர்.
அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகளைக் குத்தி விட்டார் ஏழுமலை. ரத்த வெள்ளத்தில் கலைவாணி கீழே விழ போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கலைவாணியை போலீஸார் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
ஏழுமலையைக் கைது செய்த போலீஸார் அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications