ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்... 30 பேர் பலி, 70 பேர் காயம்
பாக்தாத்: ஈராக்கில் உள்ள கர்பலா நகரில் ஷியா யாத்திரிகர்களை குறிவைத்து 2 கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 30 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 70 பேர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்பலாவுக்கு செல்லும் யாத்திரிகர்கள் பேருந்துகள் நின்று கொண்டிருந்த டர்மினலில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 9 பேர் உயிர் இழந்தனர், 18 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே கர்பலாவின் தென் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த வாரம் நடந்த மூன்று தற்கொலைப்படை தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயம் அடைந்தனர்.
நேற்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இரண்டு இடத்தில் தெருவோரம் வைத்திருந்த குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு வெடித்ததில் ஈராக் இராணுவ அதிகாரி ஒருவரும், அவரது டிரைவரும் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டாவது குண்டு வெடிப்பில் அந்த வழியாகச் சென்றிருந்தவர்களில் குறைந்தது 8 பேர் காயம் அடைந்தனர்.
கர்பலா நகரில் ஏராளமான ஷியா பிரிவு யாத்திரிகள் கூடியிருந்த நேரத்தில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. யாத்திரிகர்கள் ஷியா பிரிவுத் தலைவர்களில் ஒருவரான இமாம் ஹுசைனின் இறப்பிற்காக 40 நாள் துக்கம் அனுஷ்டித்து இறுதியில் கர்பலா செல்வது வழக்கம். இந்த புனித காலத்தில் கர்பலாவில் வாகனப் பயன்பாட்டிற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். அதனால் யாத்திரிகர்கள் கால் நடையாக வந்துள்ளனர்.
இதனால் அங்கு கூடுதலாக 120,000 போலீசாரும், இராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல் கார் வெடிகுண்டு தாக்குதல் கிழக்கு கர்பலாவில் இருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் அல் இப்ராஹிமி பகுதியில் உள்ள பஸ் டர்மினலில் நடந்தது.
இந்த தாக்குதல் நடந்து 4 மணி நேரம் கழித்து தெற்கு கர்பலாவில் இரண்டாவது குண்டு வெடித்தது.
இது குறித்து யாத்திரிகர் பாத்மா மாடலௌல் (40) கூறுகையில், "என்னதான் குண்டு வெடித்தாலும் நாங்கள் ஹூசைனுக்கு மரியாதை செய்ய நாங்கள் எங்கள் யாத்திரையைத் தொடர்வோம். இந்த தாக்குதல்களை நடத்தும் இஸ்லாமிய எதிரிகள் ஓயும் வரை நாங்கள் எங்கள் பயணத்தை நிறுத்தமாட்டோம். நாங்கள் கர்பலா வந்ததே அவர்களுக்கு ஒரு செய்தி சொல்லத்தான். அவர்கள் தாக்குதல் மேல் தாக்குதல் நடத்த ஈராக்கின் பகையாளிகளை எதிர்த்து போராடும் எண்ணம் எங்களுக்கு அதிகரிக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்," என்றார்.
"ஏற்கனவே யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதால் இந்த தாக்குதல்கள் அதிகாரிகள் எதிர்பார்த்ததுதான். ஆனால் என்னதான் போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும் நகரம் முழுவதும் நடந்து வரும் அத்தனை பயணிகளையும் பாதுகாப்பது என்பது கடினமானது", என்று பிபிசியின் ஜிம் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications