ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்... 30 பேர் பலி, 70 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஈராக்கில் உள்ள கர்பலா நகரில் ஷியா யாத்திரிகர்களை குறிவைத்து 2 கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 30 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 70 பேர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்பலாவுக்கு செல்லும் யாத்திரிகர்கள் பேருந்துகள் நின்று கொண்டிருந்த டர்மினலில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 9 பேர் உயிர் இழந்தனர், 18 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே கர்பலாவின் தென் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயம் அடைந்தனர்.

கடந்த வாரம் நடந்த மூன்று தற்கொலைப்படை தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயம் அடைந்தனர்.

நேற்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இரண்டு இடத்தில் தெருவோரம் வைத்திருந்த குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு வெடித்ததில் ஈராக் இராணுவ அதிகாரி ஒருவரும், அவரது டிரைவரும் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டாவது குண்டு வெடிப்பில் அந்த வழியாகச் சென்றிருந்தவர்களில் குறைந்தது 8 பேர் காயம் அடைந்தனர்.

கர்பலா நகரில் ஏராளமான ஷியா பிரிவு யாத்திரிகள் கூடியிருந்த நேரத்தில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. யாத்திரிகர்கள் ஷியா பிரிவுத் தலைவர்களில் ஒருவரான இமாம் ஹுசைனின் இறப்பிற்காக 40 நாள் துக்கம் அனுஷ்டித்து இறுதியில் கர்பலா செல்வது வழக்கம். இந்த புனித காலத்தில் கர்பலாவில் வாகனப் பயன்பாட்டிற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். அதனால் யாத்திரிகர்கள் கால் நடையாக வந்துள்ளனர்.

இதனால் அங்கு கூடுதலாக 120,000 போலீசாரும், இராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கார் வெடிகுண்டு தாக்குதல் கிழக்கு கர்பலாவில் இருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் அல் இப்ராஹிமி பகுதியில் உள்ள பஸ் டர்மினலில் நடந்தது.

இந்த தாக்குதல் நடந்து 4 மணி நேரம் கழித்து தெற்கு கர்பலாவில் இரண்டாவது குண்டு வெடித்தது.

இது குறித்து யாத்திரிகர் பாத்மா மாடலௌல் (40) கூறுகையில், "என்னதான் குண்டு வெடித்தாலும் நாங்கள் ஹூசைனுக்கு மரியாதை செய்ய நாங்கள் எங்கள் யாத்திரையைத் தொடர்வோம். இந்த தாக்குதல்களை நடத்தும் இஸ்லாமிய எதிரிகள் ஓயும் வரை நாங்கள் எங்கள் பயணத்தை நிறுத்தமாட்டோம். நாங்கள் கர்பலா வந்ததே அவர்களுக்கு ஒரு செய்தி சொல்லத்தான். அவர்கள் தாக்குதல் மேல் தாக்குதல் நடத்த ஈராக்கின் பகையாளிகளை எதிர்த்து போராடும் எண்ணம் எங்களுக்கு அதிகரிக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்," என்றார்.

"ஏற்கனவே யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதால் இந்த தாக்குதல்கள் அதிகாரிகள் எதிர்பார்த்ததுதான். ஆனால் என்னதான் போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும் நகரம் முழுவதும் நடந்து வரும் அத்தனை பயணிகளையும் பாதுகாப்பது என்பது கடினமானது", என்று பிபிசியின் ஜிம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+