சென்னை-கோவை டூரன்டோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்கும் நிற்காமல் செல்லும், டூரன்டோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, சென்னை-கோவை இடையே நேற்று துவங்கியது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.

சென்னை-கோவை இடையே நான்-ஸ்டாப் டூரன்டோ எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் பயணத்தை நேற்று மாலை 4 மணிக்கு துவங்கியது. இதற்கான துவக்க விழா நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது.

இந்த ரயில் இன்று கோவையிலிருந்தும், நாளை சென்னையிலிருந்தும் தனது வழக்கமான பயணத்தை மேற்கொள்ளும். இந்த குளு, குளு ரயில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயங்கும்.

டூரன்டோ எக்ஸ்பிரஸ் (12243) தினமும் காலை 6. 50 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு கோவை சென்றடையும். மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து பிற்பகல் 3. 05 மணிக்கு புறப்படும் டூரன்டோ எக்ஸ்பிரஸ் (12244) இரவு 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

இந்த ரயில் கோவை எக்ஸ்பிரஸைவிட ஒரு மணி நேரம் குறைவான நேரத்தில் இலக்கை அடையும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்டுள்ள இந்த ஏசி ரயிலில் இருக்கை வசதி கொண்ட ஒரு முதல் வகுப்பு சொகுசு பெட்டியும், 7 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. இதில் 515 பேர் பயணம் செய்யலாம்.

சென்னையிலிருந்து கோவைக்கு முதல் வகுப்பு கட்டணம் ரூ.1,260, இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.625. கோவையிலிருந்து சென்னைக்கு முதல் வகுப்பு ரூ.1,235, இரண்டாம் வகுப்பு ரூ.610. இந்த கட்டணங்களில் உணவும் அடங்கும்.

ஏற்கனவே சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு டூரன்டோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+