கடல் போக்குவரத்து வரைபடம்-குமரியில் கடற்படை சர்வே
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடல் போக்குவரத்து வரைபடம் தயாரிப்புப் பணியில் இந்தியக் கடற்படை ஈடுபட்டுள்ளது.
கடற்படை வீரர்களுக்கு கடல் பகுதியில் உள்ள நிலைமைகள் குறித்து ஆய்வு செய்ய அவ்வப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடல் போக்குவரத்து வரைபடம் தயாரிக்கப்படுவது வழக்கம்.
ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருந்து நடுக்கடல் வரை படகுகள், ஹெலிகாப்டர் ஆகியவற்றில் செல்ல ஆகும் நேரம், அப்போது கடல் அலையின் வேகம் எவ்வாறு இருக்கும், காற்றின் திசை, கடல் நீரோ்ட்டம் உள்ளிட்ட விவரங்கள் சேரிக்கப்படுகிறது.
இதன்படி கொச்சி கடற்படை வீரர்கள் குழு, நெல்லை மாவட்டம் மணப்பாடு முதல் குமரி மாவட்டம் மூட்டம் வரை உள்ள கடல் பகுதியில் சர்வே நடத்தி வருகின்றனர். இதற்காக ஐஎன்எஸ் சர்வேக்சாக் என்ற கடற்படை கப்பல் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கப்பலில் உள்ள ஹெலிகாப்டர், படகுகள் உதவியுடன் வீரர்கள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications