உ.பி.-ஹரியானா எல்லையில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இன்று காலை ஹரியானா-உத்தரபிரதேச எல்லையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது.
இது குறித்து இந்திய வானிலையியல் துறை கூறியதாவது,
இன்று காலை 8. 37 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹரியானாவின் சோனிபட் மாவட்டம் மற்றும் உத்தர பிரதேசத்தின் பாக்பட் மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்று கூறியுள்ளது.
கடந்த 19-ம் தேதி தென்மேற்கு பாகிஸ்தானில் 7.4 அளவுக்கு கடும் பூகம்பம் ஏற்பட்டபோது அதன் அதிர்வுகள் டெல்லி, ராஜஸ்தான், மேற்கு உத்தர பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் ஹரியானாவில் உணரப்பட்டது.












Click it and Unblock the Notifications