தனியார் ஷோரூமில் தீவிபத்து - ரூ. 50 லட்சம் மதி்ப்பிலான பொருட்கள் நாசம்
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கடையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
அம்பை பூக்கடை பஜாரில் தனியார் ஷோரூம் உள்ளது. இங்கு டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட வீ்ட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன் தினம் இரவு கடை ஊழியர்கள் கடையைப் பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் பூட்டிய கடைக்குள் இருந்து புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
உரிமையாளர் வந்து திறந்து பார்த்தபோது கடையில் தீ பற்றி எரிந்தது. அங்கிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் எரித்து சாம்பலாயின. இது குறித்து அம்பை, தென்காசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து மின்கசிவால் ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அம்பை இன்ஸ்பெக்டர் காளியப்பன் விசாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications