சச்சினுக்கு டாக்டர் பட்டம் வழங்க புதுவை பல்கலைக்கழகம் முடிவு
புதுச்சேரி: பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம், கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட நான்கு பேருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழக அகடமி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப் பட்டது.
அதன்படி சச்சின் டெண்டுல்கர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வாங்கரி முத்தா மத்தாய், தமிழகத்தைச் சேர்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இருதயவியல் நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பான தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஒப்புதல் பெற்றவுடன் பட்டமளிப்பு விழா நடைபெறும்.












Click it and Unblock the Notifications