அக்டோபருக்குள் 8 புதிய விமானங்களை இயக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்.
Subscribe to Oneindia Tamil
மும்பை: மேலும் 8 புதிய விமானங்களை வரும் அக்டோபருக்குள் இயக்குகிறது கிங்பிஷர் ஏர்லைன்ஸ்.
தனியார் விமான சேவையில் முன்னணியில் உள்ளது கிங்பிஷர். இந்த கோடையில் பயணிகள் வரத்தைச் சமாளிக்கவும், விமானப் போக்குவரத்துத் துறையில் பொதுவாகவே ஏற்பட்டு வரும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் 8 புதிய விமானங்களை குத்தகைக்கு எடுக்கிறது.
வரும் அக்டோபர் மாதத்துக்குள் இந்த விமானங்கள் அனைத்தும் போக்குவரத்தில் சேர்க்கப்பட்டு இயக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கிங்பிஷர் நிறுவனத்தில் 34 ஏர்பஸ் உள்பட 66 விமானங்கள் உள்ளன. இந்திய விமானப் போக்குவரத்தில் 18.6 சதவீத பங்களிப்பைச் செய்கிறது கிங்பிஷர்.
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா இந்த ஆண்டு 40 புதிய விமானங்களை தனது போக்குவரத்தில் இணைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த கட்டண விமான டிக்கெடுகளை புக் செய்ய












Click it and Unblock the Notifications