Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஜிபியாக லத்திகா சரண் மறு நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து நடராஜ் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக டிஜிபியாக லத்திகா சரண் மீண்டும் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை துறை டிஜிபி நடராஜ் மீண்டும் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக லத்திகா சரண் 2010ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி நியமிக்கப்பட்டார். இதையடுத்து தன்னை விட ஜூனியரான லத்திகா சரணை டிஜிபியாக நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி நடராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், லத்திகா நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே இந்த நியமனம் செல்லாது என்று அறிவித்து மீண்டும் புதிதாக நியமன நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.

இதையடுத்து டிஜிபி அந்தஸ்தில் உள்ள அனைவரின் பட்டியலையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வானையத்திற்கு தமிழகஅரசு அனுப்பியது. அதில் சீனியாரிட்டிப்படி நடராஜ்தான் முதலிடத்தில் இருந்தார். இருப்பினும் 3வது இடத்தில் இருந்த லத்திகா சரணை மறு நியமனம் செய்து கடந்த நவம்பர்27ம் தேதி அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து லத்திகா சரண் மறு நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து நடராஜ் சென்னை நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், நீண்ட பணி அனுபவம், பல்வேறு துறைகளில் பணியாற்றியது உள்ளிட்ட விஷயங்களைப் பரிசீலித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.ஜி.பி.க்கள் அடங்கிய பட்டியலில் என்னை முதல் இடத்தில் வைத்திருந்தது. டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவதற்கு அனைத்துத் தகுதிகள் இருந்தும் என்னைத் தவிர்த்து, லத்திகா சரணையே தமிழக அரசு மறுநியமனம்
செய்துள்ளது.

என்னைத் தவிர்த்து லத்திகா சரணை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமித்ததற்கு எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு தேர்வு செய்வதற்கு மாநில அரசுக்கு எந்தவித அடிப்படையும் இல்லை. கள அனுபவத்திலும், பதக்கப் பட்டியலிலும் எனக்கு அதிக அனுபவம் உள்ளது.

டி.ஜி.பி.யை மறு நியமனம் செய்யும் குழுவில் தலைமைச் செயலாளர் மாலதி இருந்துள்ளார். லத்திகாவை ஏற்கெனவே டி.ஜி.பி.யாக நியமித்து அப்போதைய உள்துறைச் செயலாளர் மாலதி உத்தரவிட்டார். இந்தக் குழுவிலும் அவரே இடம்பெற்றிருந்ததால், குழுவின் தேர்வு முறை ஒருதலைபட்சமானது என்று கருதுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக லத்திகா சரணை மறுநியமனம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் தகுதிகளும் உள்ள என்னை டி.ஜி.பி.யாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார் நடராஜ்.

இந்த மனு நேற்று தீர்ப்பாய உறுப்பினர்கள் கே.இளங்கோ, ஓ.பி.சூசம்மா ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கைப் பரிசீலித்த தீர்ப்பாய உறுப்பினர்கள் தலைமைச் செயலாளர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+