டெல்லியில் வாழைப்பழத்திற்குத் தட்டுப்பாடு-விலை உயர்வு-ஒரு டஜன் பழம் 40 ரூபாய்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தக்காளி, வெங்காயத்தைத் தொடர்ந்து தற்போது வாழைப்பழத்தின் விலையும் உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு டஜன் வாழைப்பழம் 40 ரூபாய்க்கு விற்கிறது.

மகாராஷ்டிராவிலிருந்துதான் டெல்லிக்கு பெருமளவில் வாழைப்பழம் வருகிறது. தற்போது விளைச்சல் குறைந்து, வரத்து குறைந்திருப்பதால் வாழைப்பழத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு டஜன் பழம் ரூ. 25க்கு விற்றது. இந்த நிலையில் தற்போது அது ரூ. 40 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஆசியாவின் மிகப் பெரிய காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டான ஆசாத்பூரில் உள்ள வாழைப்பழ வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சுதேஷ் சச்தேவ் கூறுகையில், டெல்லியில் வாழைப்பழத்திற்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. மகாராஷ்டிராவில் மழை தவறியதால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்றார்.

வழக்கமாக டெல்லிக்கு, தினசரி 251 டன் வாழைப்பழம் வருமாம். ஆனால் தற்போது வெறும் 70 டன் பழம்தான் வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+