பிக்சட் டெபாசிட்களை குறித்த காலத்திற்கு முன்பே முடித்தால் அபராதம்
டெல்லி: பிக்சட் டெபாசிட்களை அதன் முதிர்வுக் காலத்திற்கு முன்பே முறித்துக் கொண்டு பணத்தை எடுக்க முயன்றால், அதற்கு அபராதத் தொகையை கட்ட வேண்டும். இந்த உத்தரவை வங்கிகள் உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்துள்ளன.
முதலீட்டுப் பணத்தில் ஒரு சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் வங்கிகள் தெரிவித்துள்ளன.
முதிர்வுக் காலம் வருவதற்குள்ளாகவே பணத்தை எடுப்போருக்கு இந்த அபராதம் விதிக்கப்படும்.
இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை சமீபத்தில் வங்கிகளிடம் விட்டது ரிசர்வ் வங்கி. இதையடுத்து தற்போது இந்த முடிவை வங்கிகள் அமலுக்குக் கொண்டு வந்துள்ளன. இதன் மூலம் முன்கூட்டியே பிக்சட் டெபாசிட்களை முடித்தால், எதிர்பார்த்த பணத்தை விட குறைவான பணத்தையே பெற நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளின் இந்த அதிரடி உத்தரவால், பிக்சட் டெபாசிட் செய்வோர் முதிர்வுக் காலம் வரை முழுமையாக காத்திருந்தால் மட்டுமே முழுப் பணத்தையும் வட்டியுடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications