ஆந்திராவில் ரூ.3000 கோடியில் காகித ஆலை அமைக்கும் ஐடிசி

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆலையின் உற்பத்தி இரட்டிப்பாக்கும் திட்டத்தையும் ஐடிசி வைத்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் செயல் இயக்குநர் பிரதீப் தோபலே கூறுகையில், புதிய காகித ஆலை, பசுமை ஆலையாக உருவாக்கப்படும். இதன் திட்ட மதிப்பீடு ரூ. 3000 கோடியாகும்.
கம்மம் மாவட்டத்தில் இந்த தயாரிப்பு ஆலை நிர்மானிக்கப்படும். 1000 ஏக்கர் பரபப்ளவில் இது அமையும். இங்கு வருடத்திற்கு 2.5-3 லட்சம் டன் காகிதம் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் டன் என்ற உற்பத்தி இலக்கை எட்டவும் தீர்மானித்துள்ளோம்.
அட்டைப் பெட்டிகளுக்கான பேப்பர் போர்டுகள், எழுது காகிதங்கள், அச்சுக் காகிதங்கள் ஆகியவை இங்கு தயாரிக்கப்படும். தற்போது ஐந்து காகித ஆலைகள் எங்களிடம் உள்ளது. மொத்தம் 5.5. லட்சம் மில்லியன் டன் காகிதம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications