ஜெயகுமாருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் நிர்வாகி மீது காங். தாக்குதல்
மதுரை: இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் இயக்க நிர்வாகி மீது காங்கிரஸ் பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர் ஜெயக்குமார் இலங்கை கடற்படையால் இறக்கமின்றி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் மீனவர் ஜெயக்குமாருக்காக மதுரையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காந்தி என்பவர் மீனவர்களை காக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அவரை ஒட்டவிடாமல் சுவரொட்டியை கிழித்து எறிந்தார்.
மேலும், காந்தியை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கருப்பையா என்பவர் அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கருப்பையாவின் மண்டை உடைந்தது. இதையடுத்து காந்தி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், காந்தியின் கைதுக்கு நாம் தமிழர் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தொடர்ந்து பேச்சுரிமைக்க்கும். கருத்துரிமைக்கும் தடை விதித்து பொய் வழக்கு போட்டு தங்களது மக்கள் விரோத போக்கை வெளிப்படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகள் தற்போது ஆயுதத்தையும் கையில் எடுத்து எம் மக்களை ஒடுக்க நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இவ்வெறிச் செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications