திருமலை கோயிலி்ல் நேபாள அதிபர் குடும்பத்தோடு தரிசனம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: நேபாள அதிபர் ராம் பரண் யாதவ் (63) இன்று திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் அவரது குடும்பத்தினரும், அதிகாரிகள் குழுவும் உடன் சென்றனர்.
அவருக்கு இன்று திருப்பதி தேவஸ்தானத்தினர் முறையாக மரியாதை செய்து வரவேற்றனர். சாமி கும்பிட்ட பிறகு அதிபருக்கு புனிதப் பட்டுத் துணி, புனித நீர் மற்றும் லட்டு வழங்கப்பட்டது. பின்னர் அவருக்கு கோயிலின் தலைமை பூசாரிகள் தங்களது ஆசிகள் வழங்கினார்.
ராம் பரண் யாதவ் 10 நாள் சுற்றுப்பயணமாக கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார். அவர் இன்று மதியம் பெங்களூரில் இருந்து திருப்பதி மலைக்கு காரில் சென்றார்.












Click it and Unblock the Notifications