திருச்சி பாஸ்போர்ட் அலுவலக புரோக்கர்கள் 9 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி : திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த ஒன்பது புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகின்றது.

புரோக்கர்களை ஒழிக்க பாஸ்போர்ட் அலுவலகமும், போலீசாரும் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் எடுக்க வருபவர்களை ஏமாற்றி பல ஆயிரம் ரூபாய்களை புரோக்கர்கள் பறித்துவிடுகின்றனர். இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரூபேஸ்குமார் மீனாவுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து துணை கமிஷனர் ரூபேஸ்குமார் மீனா உத்தரவின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது புரோக்கர்கள் காஜா மொய்தீன், ரவி, கண்ணன், கலீல் முகமது, இந்திரஜித், அந்தோணி, சுதன், அஜீத், லியாகத் அலி ஆகிய ஒன்பது பேரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+