தூத்துக்குடியில் இந்திய போர்க்கப்பல்-பொதுமக்கள் பார்க்க அனுமதி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கப்பற்படை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய கப்பல் படைக்கு சொந்தமான போர்க்கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது. பொதுமக்களும், மாணவ, மாணவியரும் கப்பலை வியப்புடன் பார்த்தனர்.

இந்திய கப்பல்படை தினவிழா இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரம் கடைப்பிடிக்கப்படும். அப்போது கப்பல் படை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக இந்திய கப்பல் படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் கார்முக் தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது. இந்த கப்பல் இந்திய கப்பல் படையில் கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கப்பலில் போர்காலத்தில் பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன.

பில்லர் கிளாப் என்ற வகையைச் சேர்ந்த இந்த கப்பலில் 120 கப்பற்படை அலுவலர்களும், மாலுமிகளும் உள்ளனர். தரையிலிருந்து 350 கிமீ தாக்க கூடிய ஆயுதங்கள், ஒரு நிமிடத்திற்கு 90 ரவுண்ட் சீறிப் பாயக்கூடிய சூப்பர் சானிக் கன், ஏவுகணைகள திசை திருப்பவும், தாக்கி அழிக்கவும் கூடிய ஏகே 230 ரக ஆயுதங்கள் இந்த போர்க்கப்பலில் இடம் பெற்றுள்ளன.

பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட நேற்று ஒரு நாள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து வந்துள்ள இந்த கப்பல் இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+