தேமுதிக வாக்கு வங்கியை வைத்து பேரம் பேசி வருகிறார் விஜயகாந்த்-டாக்டர் கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

Dr Krishnasamy and Vijayakanth
மதுரை: விஜயகாந்த்தின் செயல்கள் நல்ல அரசியல்வாதியைப் போலத் தெரியவில்லை. மாறாக அவரது செயல்களைப் பார்க்கும்போது அவர் பேரம் பேசி வருவதாகவே தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற பேச்சு அடிபடும் நிலையில், அக்கூட்டணியில் ஏற்கனவே சேர்ந்துள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்த குற்றச்சாட்டால், லேசான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை வந்த கிருஷ்ணசாமி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நிலைப்பாடு ஒரு மாயை. தேர்தல்களில் தே.மு.தி.க., 8 சதவீத ஓட்டு பெற்றது. எனவே தொண்டர்களுக்கு அரசியல் பங்கீடு பெற்று தரும் முறைகளை விஜயகாந்த் கையாள வேண்டும். ஆனால் அவரது கட்சி நடவடிக்கைகள் பேரம் பேசுவதாக உள்ளன. ஓட்டு வங்கியை வைத்து அரசியல் சதுரங்கம் ஆடக் கூடாது.

தேர்தலில் தி.மு.க., காங்., கூட்டணி தோற்கும். அக்கட்சிகள் இருக்கும். ஆனால் மற்ற சிறிய கட்சிகள் காணாமல் போகும். ஊழல் பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கும் தி.மு.க.வின் கனவு நிறைவேறாது.

அ.தி.மு.க தற்போதைய கூட்டணி கட்சிகளுடன் மட்டுமே தேர்தலை சந்தித்தால் கூட போதும், அது இமாலய வெற்றி பெறும்.

பீகாரில் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன், தேர்தல் கமிஷன் நடத்தை விதிகளை அமல்படுத்தியது. தமிழகத்தில் இனியும் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த மறுக்கிறது.

விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவைகளால் தி.மு.க., அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற புதிய தமிழகம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்கள் நடத்தப்படுகிறது என்றார் கிருஷ்ணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+