பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை: கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடிகையின் புகைப்படத்தைக் காட்டி ஆந்திர வாலிபரை ஏமாற்றி கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சீனிவாசலு. இவரது மகன் மனோஜ் தேவேந்திரன் (28). அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதற்காக பத்திரிக்கை ஒன்றில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்திருந்தனர். அந்த விளம்பரத்தில் மனோஜின் இமெயில் முகவரி உள்ளிட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இதைப் பார்த்த பத்ரிநாத் என்பவர் துணை நடிகை ஒருவரின் புகைப்படத்தை அனுப்பி, இவர்தான் பெண், பிடித்திருந்தால் நேரில் வருமாறு கூறியுள்ளார். போட்டோவைப் பார்த்த மனோஜுக்குப் பெண் பிடித்துப் போகவே, தனது தாய் ஜெயதேவியுடன் நேற்று சென்னை வந்தார்.

அவர்களை விமான நிலையத்திற்கு சென்று பத்ரிநாத் வரவேற்றார். பின்னர் அவர்களை ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைத்து காலை உணவையும் தானே வாங்கிக் கொடுத்துள்ளார். பிறகு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தையும் கொடுத்துள்ளார். அதை குடித்த தாயும், மகனும் மயங்கினர்.

உடனே பத்ரிநாத் அவர்களிடம் இருந்த நகை, பணத்துடன் தப்பித்து விட்டார். ஜெயதேவி தன் பையில் வைத்திருந்த விலை உயர்ந்த வைர நெகலசும் பறிபோனது.

இது குறித்து வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு திவான்மியூரிலும் இதேபோன்று பெண் ஆசை காட்டி நூதனக் கொள்ளை நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+