வளைகுடாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலை... ஈரான் தொடங்குகிறது!
டெஹ்ரான்: வளைகுடா பகுதியின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அராக் பகுதியில் தொடங்குகிறது ஈரான்.
நாளொன்றுக்கு 16 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட பிரமாண்ட ஆலை இது.
உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடாகத் திகழ்கிறது ஈரான். அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பல்வேறு தடைகளையும் ஈரான் இன்று தாக்குப் பிடிக்கக் காரணம் இந்த எண்ணெய் வளமும் அதை ஈரான் பயன்படுத்தும் முறையும்தான்.
கடந்த டிசம்பர் வரை 5 பில்லியன் பேரல்கள் இருப்பாகக் கொண்டிருந்தது ஈரான்.
இந்த நிலையில், மத்திய ஈரானில் உள்ள அராக் பகுதியில் ஷாஸந்த் என்னுமிடத்தில் புதிதாக ஒரு பெரிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவியுள்ளது ஈரான். வளைகுடா பகுதியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் மிகப் பெரியது இந்த ஆலைதான்.
ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யையும், பணிகள் முழுமையாக முடிந்த பிறகு 16 மில்லியன் பேரல் எண்ணெய்யையும் சுத்திகரிக்கும் இந்த ஆலை.
மேலும் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் அடுத்த வாரம் திறக்கிறது.
இந்த இரு ஆலைகளும் யூரோ -5 தரத்துக்கேற்ப மாசுபாடு ஏற்படுத்தாத பெட்ரோலை சுத்திகரிக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலைகள் மூலம் ஈரானின் எண்ணெய் இருப்பு சக்தி 16.7 பில்லியன் லிட்டராக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications