பாமக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது-அன்புமணி ராமதாஸ்
பண்ருட்டி: பாமக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே கூட்டணி குறித்து பாமகவினர் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
பண்ருட்டியில் சட்டசபைத் தொகுதி பாமக கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,
நாட்டின் விலைமதிக்க முடியாத சக்திகள் இளைஞர்கள். எதிர்காலத்தில் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பா.ம.க. இப் பயிற்சிக் கூட்டத்தை நடத்துகிறது. வேறு எந்தக் கட்சிகளும் இதுபோல் கூட்டத்தை நடத்துவதில்லை.
தமிழகத்தில் சினிமா மோகம், இலவசம், சாராயப் புரட்சிதான் நடக்கிறது. மத்திய அமைச்சராக இருந்தபோது உயர்ந்த விருதுகளை பெற்று நமது சமுதாயத்துக்கு பெருமையை சேர்த்துள்ளேன். அமெரிக்காவில் 911 என்ற ஆம்புலன்ஸ் சேவையை பார்த்துதான் 108 ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்தேன். மேலும் பல்வேறு நல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளேன்.
தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும்போது இடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு தான். இதையெல்லாம் எண்ணிப்பார்த்து இளைஞர்களும், இளம்பெண்களும் பாடுபட வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பாமக தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications